வவுனியாவில் கள்ள நோட்டுடன் நபர் ஒருவர் கைது
வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டினை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வேப்பங்குளம், பட்டாணிக்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதன்போது, குறித்த 5ஆயிரம் ரூபா நோட்டில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் 5ஆயிரம் ரூபா வைத்திருந்த 24வயதுடைய நபரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
N5