செய்திகள்

ரிஷாத் பதவி விலக வேண்டும் : என்கிறார் அமைச்சர் சம்பிக்க

நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு விசாரணை நடத்துவதற்கு இடமளிக்கும் வகையில் அமைச்சர் ரிஷாத் பதியூதின் தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதியூதினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானது எனவும் இதனை பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது அர்த்தமற்றது. இது தொடர்பாக பொலிஸாரும் புலனாய்வு பிரிவுமே விசாரணை நடத்த வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)