செய்திகள்

டிசம்பர் 7 ஜனாதிபதி தேர்தல் நடக்கும் : இந்தியாவில் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை டிசம்பர் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் ஆனால் இது வரையில் எந்தவொரு கட்சியினாலும் தமது வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
இது வரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எந்த கட்சியும் அறிவிக்காத காரணத்தினால் தானும் அந்த விடயத்தில் அவசரப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)