செய்திகள்

எங்களுடன் பேசாது தேசிய அரசாங்கம் ஒப்பந்தம் செய்யக் கூடாது : சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தல்

சிறுபான்மை கட்சிகளுடன் பேசாது தேசிய அரசாங்கம் தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சில் இந்த கட்சிகள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி , முஸ்லிம் காங்கிரஸ் , ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய அரசாங்கம் தொடர்பாக புதிய ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)