எமது ஆட்சியில் முப்படைகள் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட பயன்படுத்தப்பட மாட்டார்கள் -சரத் பொன்சேகா
திவுலபிட்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது சிலாபத்தில் எரிபொருள் மானியம்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தற்போது சிறையில் இருக்க மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடி திரிகின்றார் என்றும் மையப்போக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் இந்த நிலைமைகள் அனைத்தும் மாற்றப்படும் என்றும் முப்படைகள் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.
மேலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே முப்படையினர் செயற்படுவார்கள், எமது ஆட்சியில் ஒரு வலுவான நாட்டை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்வோம்.ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீரைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர் சிறையில் இருக்க அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடித்திரிவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.(15)